தமிழகம்

‘நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட கூடாது’ - முன்னாள் நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் ஒருதலைப் பட்​ச​மாக செயல்​படு​வ​தாக கூறி உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதன், அவருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு புகார் அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வு, இது தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் வாஞ்​சி​நாதனை நேரில் வரவழைத்து விசா​ரணை நடத்​தியது.

இந்​நிலை​யில், வாஞ்​சி​நாதனுக்கு எதி​ரான நடவடிக்​கைகளை கைவிடக் கோரி உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.சந்​துரு தலை​மை​யில் ஓய்வு பெற்ற நீதிப​தி​கள் சிலர் கூட்​டாக அறிக்கை வெளி​யிட்​டனர். இதையடுத்​து, நீதி​மன்​றத்​தின் அன்​றாட நடவடிக்​கை​களில் முன்​னாள் நீதிப​தி​கள் தலை​யீடு செய்​யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்​மோகன் அமர்​வில் இந்த மனு மீதான விசா​ரணை நேற்று நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி ஆஜராகி வாதிட்​டார். இதையடுத்து நீதிப​தி​கள், “நீ​தித்​துறை சார்ந்த விவ​காரங்​களில் மனு​தா​ரருக்கு என்ன சம்​பந்​தம் உள்​ளது? இது​போன்ற விஷ​யங்​களில் மனு​தா​ரர் தலை​யிடக் கூடாது” என்று எச்​சரித்​தனர். பின்​னர், சுய​விளம்​பரத்​துக்​காக இந்த வழக்கை தொடர்ந்​துள்​ள​தாக கூறி, மனு​தா​ரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்​தனர்.

SCROLL FOR NEXT