தமிழகம்

நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: நெல்லை மனோன்​மணி​யம் சுந்​தரனார் பல்​கலை.​யில் நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி 739 மாணவர்​களுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலை.​யின் 32-வது பட்​டமளிப்பு விழா வ.உ.சி. கலை​யரங்​கில் நடை​பெற்​றது. பல்​கலைக்​கழகம் மற்​றும் அதன் 104 உறுப்​புக் கல்​லூரி​களில் படித்த 37,376 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்பட்​டன.

இவர்​களில் 739 பேருக்கு ஆளுநர் ஆர்​.என். ரவி நேரடி​யாக பட்​டங்​களை வழங்​கி​னார். துணைவேந்​தர் ந.சந்​திரசேகர் வரவேற்​றார். இந்​திய புவி காந்​த​வியல் நிறுவன இயக்​குநர் அ.பி.டிம்ரி பட்​டமளிப்பு விழா உரை​யாற்​றி​னார். விழா​வில் பங்​கேற்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்த தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், விழா​வில் பங்​கேற்​க​வில்​லை. பல்​கலை.​யில் நடை​பெற்ற கடந்த 3 பட்​டமளிப்பு விழாக்​களி​லும் இணைவேந்​த​ரான உயர்​கல்​வித் துறை அமைச்​சர்​கள் பங்​கேற்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆளுநரை புறக்​கணித்த மாணவி: பட்​டமளிப்பு விழா​வில் முனை​வர் பட்​டம் பெற வந்​திருந்த நாகர்​கோ​விலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெறாமல், பல்​கலைக்​கழக துணைவேந்​தர் சந்திரசேகரிடம் பட்​டச் சான்​றிதழை கொடுத்​தார். அப்​போது துணைவேந்​தர் ‘ஆளுநரிடம் கொடுத்து பட்டம் வாங்​குங்​கள்’ என்று கூறினார். தனக்கு விருப்​பமில்லை என்று மாணவி கூறி​னார்.

ஆளுநரும் ‘ஓகே’ என்று கூறியதையடுத்​து,பட்​டச் சான்​றிதழை துணைவேந்​தரே கொடுத்​தார். பின்​னர் ஜீன் ஜோசப் கூறும்​போது, “தமிழுக்​கும், தமிழக மக்​களுக்​கும் எது​வும் செய்​யாத ஆளுநரிடம் பட்​டம் பெற எனக்கு விருப்​பமில்​லை” என்​றார். இவரது கணவர் ராஜன், நாகர்​கோ​வில் மாநகர திமுக துணைச் செய​லா​ள​ராக பொறுப்பு வகிக்​கிறார். ஆளுநரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் மாணவி பட்டம் பெற்றது சர்ச்சையை கிளப்பியது.

SCROLL FOR NEXT