மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோரிக்கை சாசனம் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. | படம்: எல்.சீனிவாசன் | 
தமிழகம்

நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்​கால மாக மாற்ற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அதை செயல்​படுத்த வேண்​டும் என்று நெடுஞ்​சாலைத்​துறை பணி​யாளர்​கள் நீண்ட நாட்​களாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற்​று, அரசாணையை வெளி​யிட வேண்​டும். கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் கேட்டு விண்​ணப்பித்து 19 ஆண்​டு​களாக காத்​திருப்​பவர்​களுக்கு விரைந்து பணி வழங்க வேண்​டும். மாநில நெடுஞ்​சாலை ஆணை​யத்தை கலைக்க வேண்​டும்.

சாலைகளை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கையை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி முன்னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடத்​தில் மனு அளித்​து, எழில​கம் வளாகத்​தில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக தமிழ்​நாடு நெடுஞ்​சாலைத்​ துறை சாலைப் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் அறி​வித்​திருந்​தனர்.

இதையடுத்து பல்​வேறு மாவட்​டங்​களில் சங்​கத்​தின் மாவட்​டத் தலை​வர்​களை, காவல்​துறை​யினர் வீட்டு சிறை வைத்​தனர். சென்னை நோக்கி வாக​னங்​களில் புறப்​பட்​ட​வர்​கள் பல மாவட்​டங்​களில் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். இதை​யும் மீறி எழில​கம் வந்​தவர்​களை காவல் ​துறை​யினர் கைது செய்​தனர்.

இதைக் கண்​டித்து சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் அம்​ச​ராஜ் தலை​மை​யில் 50 பேர் வாலாஜா சாலை​யி​லிருந்து ஊர்​வல​மாக எழிலகம் நோக்கி சென்​றனர். இவர்​களை​யும் காவல்​ துறை​யினர் தடுத்​து நிறுத்​தி கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT