தமிழகம்

பொன்முடிக்கு எதிரான புகாரை போலீஸ் நிராகரிப்பு: நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தான் அளித்த புகாரை போலீ​ஸார் நிராகரித்து விட்​ட​தாக பாஜக வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, கடந்த ஏப்​ரலில் சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இந்த பேச்சுகாரண​மாக அவரது அமைச்​சர் பதவி​யும் பறி​போனது. உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணைக்கு எடுத்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது, பொன்​முடி​யின் சர்ச்சை பேச்சு தொடர்​பாக அவருக்கு எதி​ராகப் பெறப்​பட்ட 115 புகார்​களில் 71 புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்டுவிட்டன என்​றும், 40 புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டது குறித்து தபால் மூலமாக தகவல் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது என்​றும், 4 புகார்​கள் ஆன்​லைன் மூல​மாக முடித்து வைக்​கப்​பட்​டது என்​றும் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து பொன்​முடிக்கு எதி​ரான புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டது குறித்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​களிடம் ஒப்​புகை பெறப்பட்டது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, இந்த வழக்கு ஆக.14-க்கு தள்​ளி​வைக்கப்பட்டது. இந்​நிலை​யில் பொன்​முடிக்கு எதி​ராக தான் அளித்த புகார் மனுவை போலீ​ஸார் நிராகரித்து விட்​ட​தாகக் கூறி, பாஜக வழக்​கறிஞ​ர் ஜி.எஸ்​.மணி, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இதுதொடர்​பாக அவர் தாக்​கல் செய்​துள்ள மனு​: முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, பெண்​களை​யும், குறிப்​பிட்ட சமுதாயங்களையும் அவதூறாகப் பேசி​யுள்​ளார். ஏற்​கெனவே பட்​டியலின சமு​தா​யம் குறித்​தும், அவரது தொகுதி வாக்​காளர்​கள் குறித்​தும் அவதூறாகப் பேசி​யுள்​ளார்.

எனவே பொன்​முடிக்கு எதி​ராக குற்​ற​வியல் ரீதி​யாக வழக்​குப்​ப​திவு செய்​யக் கோரி நான் அனுப்​பிய புகார் மனுவை சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் நிராகரித்து உத்​தர​விட்​டுள்​ளனர். இது சட்​ட​விரோத​மானது.

எனவே பொன்​முடிக்கு எதி​ராக குற்​ற​வியல் ரீதி​யாக வழக்​குப்​ப​திவு செய்​வதுடன், இந்த வழக்கை சிபிஐ அல்​லது வேறு ஏதாவது சிறப்பு புல​னாய்வு அமைப்​புக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்​ளது. இந்​த வழக்​கு விரை​வில்​ விசாரணைக்​கு வரவுள்​ளது.

SCROLL FOR NEXT