சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட காவல் துறையினர். | படம்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

ஆகஸ்ட் 15-ல் முதல்வர் தேசியக் கொடியேற்றுகிறார்: சென்னை கோட்டையில் சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, சென்​னை​யில் விழா நடை​பெறும் புனித ஜார்ஜ் கோட்​டை, விமான நிலை​யம் உட்பட பல்​வேறு பகு​தி​களி​லும் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்​தி​யா​வின் 79-வது சுதந்​திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசை​யாக கொண்​டாடப்​படு​கிறது.

இதை முன்னிட்டு சென்​னை​யில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து 5-வது ஆண்​டாக தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து உரை​யாற்​றுகிறார்.

முன்​ன​தாக, முப்​படை, காவல் துறை உள்​ளிட்ட பல்​வேறு பிரி​வினரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​கிறார். தொடர்ந்து நடை பெறும் நிகழ்ச்​சி​யில், ஐயுஎம்​எல் தேசி​யத் தலை​வர் காதர் மொய்​தீனுக்கு ‘தகை​சால் தமிழர்’ விருதை வழங்​குகிறார். இதுத​விர, கல்​பனா சாவ்லா விருது, வீரதீர செயலுக்​கான விருது உள்​ளிட்ட விருதுகள், பதக்​கங்​களை வழங்​கு​கிறார்.

விழா நடை​பெறும் ஜார்ஜ் கோட்டை மற்​றும் அதை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்டு வருகிறது. 9,000 போலீ​ஸார் பாது​காப்​பு, கண்​காணிப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர்.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, சென்னை விமான நிலை​யம், ரயில் நிலை​யங்​கள், பேருந்து முனை​யங்​கள், வணிக வளாகங்​கள், கடற்​கரை பகு​தி​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் இதர முக்​கிய இடங்​களில் சோதனை, கண்​காணிப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தங்​கும் விடு​தி​கள், ஹோட்​டல்​களில் தீவிர சோதனை நடத்​தப்​படு​கிறது.

சந்​தேக நபர்​களின் நடமாட்​டம் குறித்து தகவல் தெரிந்​தால், காவல் துறைக்கு தெரிவிக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. முக்​கிய​மான இடங்​களில் தடுப்​பு​கள் அமைத்து போலீ​ஸார் வாக​னத் தணிக்கை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை விமான நிலை​யத்​துக்கு சமீப​கால​மாக அடிக்​கடி குண்டு மிரட்​டல்​கள் வரு​வ​தால், 3 அடுக்கு பாது​காப்பு அமலில் உள்​ளது. சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, வரும் 20-ம் தேதி நள்​ளிரவு வரை 5 அடுக்கு பாது​காப்​பாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

விமானப் பயணி​கள் திர​வப் பொருட்​கள், ஊறு​காய், அல்​வா, ஜாம், எண்​ணெய் பாட்​டில்​கள் போன்​றவற்றை எடுத்​துச் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. சோதனை நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ள​தால், உள்​நாட்டு பயணி​கள், விமானம் புறப்படும் நேரத்​துக்கு ஒன்​றரை மணி நேரம் முன்​ன​தாக​வும், சர்வ​தேச பயணி​கள் மூன்​றரை மணி நேரத்​துக்கு முன்​ன​தாக​வும், விமான நிலை​யத்​துக்கு வரு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, முதல்​வர் பங்​கேற்​கும் சுதந்​திர தின விழாவுக்​கான முதல்​கட்ட ஒத்​திகை நிகழ்ச்சி கடந்த 8-ம் தேதி நடந்த நிலை​யில், நேற்று 2-ம் கட்ட ஒத்​திகை நடத்​தப்​பட்​டது. அடுத்​த கட்​ட​மாக 13-ம்​ தேதி ஒத்​தி​கை நிகழ்ச்​சி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT