தமிழகம்

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவுக்கு டிஎஸ்பி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதை உறுதி செய்த ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு தாக்கப்பட்ட வழக்கில் காவல் துறை டிஎஸ்பி ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி செங்கம் அருகே நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் எனக் கூறி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு தொடர்ந்த வழக்கில், மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல்களை உறுதி செய்து, செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து டி எஸ் பி சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமன்த் சந்தன்கவுடர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT