தமிழகம்

பால் சங்கங்களுக்கு பதிவேடு கொள்முதல் செய்ததில் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை

செய்திப்பிரிவு

மதுரை: ​பால் உற்​பத்​தி​யாளர் கூட்​டுறவு சங்​கங்​களுக்​குப் பதிவேடு​கள் கொள்​முதல் செய்​த​தில் ரூ.1.75 கோடி முறை​கேடு நடந்​தது தொடர்​பாக ஐஏஎஸ் அதி​காரி​கள் காம​ராஜ், வள்​ளலார் மீது வழக்கு பதிய தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வை, உயர் நீதி​மன்ற அமர்வு ரத்து செய்​தது.

தமிழகத்​தில் 8,790 கூட்​டுறவு பால் உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கங்​களுக்கு 5 வித​மான பதிவேடு​கள் கொள்​முதல் செய்​த​தில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறை​கேடு நடந்​திருப்​ப​தாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்​தது.

இந்த முறை​கேடு தொடர்​பாக பால்​வளத் துறை​யின் அப்​போதைய இயக்​குநர் சி.​காம​ராஜ், ஆணை​யர் வள்​ளலார் (இரு​வரும் ஐஏஎஸ் அதி​காரி​கள்) மற்​றும் கூடு​தல் பால் ஆணை​யர் கிறிஸ்​து​தாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்​குப் பரிந்துரைக்கப்​பட்​டது.

பின்​னர் இந்த குற்​றச்​சாட்​டில் இருந்து காம​ராஜ், வள்​ளலார் விடுவிக்​கப்​பட்​டனர். கிறிஸ்​து​தாஸ் பணி​யிடை நீக்​கம் செய்யப்பட்டார். பணி​யிடை நீக்​கத்தை ரத்து செய்​யக் கோரி கிறிஸ்​து​தாஸ் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தார்.

இதை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​து, “முறை​கேடு தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். காமராஜ், வள்​ளலார், கிறிஸ்​து​தாஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்​டது. இருப்​பினும் கிறிஸ்​து​தாஸ் மீது மட்​டுமே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. ஊழலில் தொடர்​புடைய ஐஏஎஸ் அதி​காரி​கள் தண்​டிக்​கப்​படு​வ​தில்​லை. சாதாரண அரசு ஊழியர்​கள் மீது மட்​டும் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​படு​கின்​றன.

இந்த வழக்​கில் ஐஏஎஸ் அதி​காரி​கள் காம​ராஜ், வள்​ளலார் மீதான குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரம் இருப்​ப​தால், இரு​வர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தர​வுக்கு தடை கோரி காம​ராஜ், வள்​ளலார் சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பால், வழக்​கறிஞர் ஆயிரம் கே.செல்​வகு​மார் வாதிட்​டனர்.

பின்​னர் நீதிப​தி​கள், “ஐஏஎஸ் அதி​காரி​கள் காம​ராஜ், வள்​ளலார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. இந்த வழக்கு தனி நீதிப​திக்கு திரும்ப அனுப்​பப்​படு​கிறது. தனி நீதிபதி மனு​தா​ரர்​கள் இரு​வருக்​கும் விளக்​கம் அளிக்க வாய்ப்பு வழங்​கி, உரிய உத்​தர​வு பிறப்​பிக்​க வேண்​டும்​" என உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT