தமிழகம்

சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா? - காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: மக்​கள் பிரச்​சினைக்​காக போராடிய காங்​கிரஸ் பிர​முகரை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​துள்ள நிலை​யில், மாநகர காவல் ஆணை​யர் என்ன கடவுளா என தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

தங்​கள் பகுதி மக்​கள் பிரச்​சினை​களுக்​காக போராடி வரும் காங்​கிரஸ் பிர​முகர் அப்​ரோஸ், மாநகர காவல் ஆணை​யருக்கு கருப்புக்கொடி காட்​டிய​தாக கைது செய்​யப்​பட்​டு, குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். இந்​நிலை​யில், வேப்​பேரியில் உள்ள அப்​ரோஸின் இல்​லத்​துக்கு தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி நேற்று சென்​று, அவரது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார்.

பின்​னர் அவர் கூறிய​தாவது: சென்னை மாநகர காவல்​துறைக்கு சிந்​திக்​கும் திறன் இல்​லை. தமிழக காங்​கிரஸூக்கு எதி​ராக காவல்​துறை கெடு​தல் செய்​திருக்​கிறது. அப்​ரோஸ் கருப்​புக் கொடி காட்டி இருந்​தா​லும் தவறில்​லை. நாட்​டின் பிரதமருக்​கு, குடியரசுத் தலை​வருக்கு எதி​ராக கருப்​புக் கொடி காட்​டு​கிறோம். அவர்​களெல்​லாம் சிரித்​துக் கொண்டே கடந்து செல்​கின்​றனர்.

காவல்​துறை ஆணை​யருக்கு கருப்​புக் கொடி காட்​டி​னால் அவ்​வளவு பெரிய குற்​ற​மா? ஜனநாயக நாட்​டில் அதற்கு இடம் இல்லையா? தமிழகத்​தில் ஜனநாயகம் இருக்​கிற​தா? தமிழக முதல்​வர் அனைத்​தை​யும் அனுசரித்து செல்​கிறார். எல்லாவற்றையும் சரிவர செய்து வரு​கிறார்.

அவருடைய ஆட்​சி​யில் காவல்​துறை இப்​படி செய்​கிறார்​கள் என்​றால் இது எவ்​வளவு பெரிய சர்​வா​தி​காரம். மாநகர காவல் ஆணையர் மனிதரா அல்​லது கடவுளா? இல்​லை, அதற்​கும் மேலா? ஆணை​யர் வரும்​போது கருப்​புக் கொடி காட்​டக் கூடாது என்று எந்த சட்​ட​மும் இல்​லை.

இதுகுறித்து எங்​கள் தலை​வர்​களு​டன் கலந்து பேசி முதல்​வரை சந்​திக்க இருக்​கிறோம். மயி​லாடு​துறை எம்​.பி. சுதா டெல்​லி​யில் நடைப​யிற்சி மேற்​கொள்​ளும்​போது, அவரிடம் நகையை பறித்த செயல், பாது​காப்பு குறை​பாட்​டை​தான் காட்​டு​கிறது என்றார். பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து ஓ.பன்​னீர்​செல்​வம் வில​கியது குறித்த கேள்விக்கு “ஓபிஎஸ் நல்ல மனிதர்​தான், ஆனால் உப்பை தின்று​விட்​டார், அவர் தண்​ணீர் குடித்​து​தான் ஆக வேண்​டும்” என்​றார்.

SCROLL FOR NEXT