தமிழகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர அனுமதி கோரி தமிழக அரசு மனு

செய்திப்பிரிவு

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களை தற்​போதுள்ள பெயர்​களி​லேயே தொடர்ந்து நடத்த அனு​மதி கோரி தமிழக அரசு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனு மீதான விசா​ரணையை உயர் நீதிமன்றம் ஆக.7-க்கு தள்ளி வைத்​துள்​ளது.

தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடைகோரி அதி​முக எம்​.பி.​யான சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அரசின் திட்​டங்​களில் உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்​றும், அதே​போல அரசின் திட்​டங்​கள் தொடர்​பான விளம்​பரங்​களில் கட்​சி​யின் கொடி, சின்​னம் போன்றவற்​றுடன் கொள்​கை, சித்​தாந்த தலை​வர்​களின் படங்​கள், பெயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்​றும் இடைக்​கால உத்தரவு பிறப்​பித்​திருந்​தது.

இந்த உத்​தரவை மாற்​றியமைக்​கக் கோரி தமிழக பொதுத்​துறை செயலர் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்யப்பட்டது. அதில், மாநில முதல்​வர், அரசி​யல் சாசன அதி​காரி என்​ப​தால் அவரை அரசி​யல் ஆளு​மை​யாக கருத முடி​யாது. அதே​போல, அரசின் விளம்​பரங்​களில் முன்​னாள் முதல்​வர்​களின் புகைப்​படங்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​றம் தடை விதிக்​க​வில்​லை.

‘உங்​களு​டன் ஸ்டா​லின்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ போன்ற அரசின் திட்​டங்​கள் ஏற்​கெனவே தொடங்கப்பட்டு விட்​ட​தால் அந்த திட்​டங்​களை தற்​போதுள்ள பெயர்​களி​லேயே தொடர்ந்து நடத்த அனு​ம​திக்க வேண்​டும் என கோரப்​பட்​டது. இந்த மனு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது.

அப்​போது இதுதொடர்​பாக உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த இடைக்​கால உத்​தரவை எதிர்த்து திமுக தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும், அந்த மனு வரும் ஆக.6-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வரவுள்​ளது என்​றும் சி.​வி.சண்​முகம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் எடுக்​கும் முடிவு​களுக்​குப் பிறகு இந்த மனுவை வி​சா​ரிக்​கலாம்​ எனக்​ கூறி வி​சா​ரணை​யை ஆக.7-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்துள்ளனர்​.

திமுக சார்பில் மேல் முறையீட்டு மனு உச்ச நீதி​மன்​றத்​தில் நாளை விசாரணை

புதுடெல்லி: உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி திமுக சார்பில் அனுராதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று முறையீடு செய்தனர். அதையேற்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை நாளை (ஆக.6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT