தமிழகம்

துணை மின்நிலைய பணியாளர்கள் வேலை நேரத்தில் வெளியே செல்லக் கூடாது: மின்வாரியம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: துணை மின்​நிலைய பணி​யாளர்​கள் வேலை நேரத்​தில் துணை மின்​நிலைய வளாகத்​தை​விட்டு வெளியே செல்ல கூடாது என மின்​வாரி​யம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் அழுத்த துணை மின்​நிலை​யங்​களில் தொடர்ந்து மின்​சார உபகரணங்​களை கண்​காணிப்​பது, அவசர காலங்​களில் விரை​வாக செயல்​பட்டு மின் வழித்​தடங்​களை சீரமைப்​பது, மின்​தடை நேரங்​களில் உடனடி​யாக செயல்​பட்டு மின்விநி​யோகம் வழங்​கு​வது ஆகிய பணி​களை துணை மின்​நிலைய பணி​யாளர்​கள் மேற்​கொள்​கின்​றனர்.

இவர்​கள் சுழற்சி முறை​யில் பணி​யாற்றி வரும் நிலை​யில், சில நேரங்​களில் ஒரே நேரத்​தில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவை​விட அதிக பணி​யாளர்​கள் இருப்​ப​தாக​வும், ஒரு சிலர் கூடு​தலாக பணியை நீட்​டித்து வேலை செய்​வ​தாக​வும், பணி நேரத்​தின்​போது வெளியே சென்று வரு​வ​தாக​வும் புகார்​கள் வந்​துள்​ளன. இது மின் பகிர்​மானத்​தின் செயல்​திறனை குறைப்​ப​தோடு, பணி​யாளர் நலனை​யும் பாதிக்​கிறது.

பணியாளர் அட்டவணை: இதை தடுக்க, பின்​வரும் அறி​வுறுத்​தல்​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும். துணை மின்​நிலைய பணி​யாளர்​கள் அட்​ட​வணையை செயற்​பொறி​யாளர் தயாரிக்க வேண்​டும். அதன்​படி மட்​டுமே பணி​யாளர்​கள் வரு​வதை உறுதி செய்ய வேண்​டும். கூடு​தல் நபர்​கள் பணி​யாற்​று​வதை அனு​ம​திக்க கூடாது. இது அவர்​களது விருப்​பத்​துக்கு ஏற்ப பணியாற்றுவதாக மாறி​விடும். பணி நேரத்​தின்​போது, துணை மின்​நிலைய வளாகத்​தை​விட்டு பணி​யாளர்​கள் வெளியே செல்ல கூடாது.

பராமரிப்பு உதவி செயற்​பொறி​யாளர் அல்​லது உதவி பொறி​யாளர் உச்ச நேரங்​கள் மற்​றும் அவசர காலங்​களில் துணை மின்நிலைய பணி​யாளர்​களுக்கு உதவ வேண்​டும். இந்த அறி​வுறுத்​தல்​கள் பின்​பற்​றப்​படு​வதை முதன்மை பொறி​யாளர்​கள், மேற்​பார்வை பொறி​யாளர்​கள் உறுதி செய்ய வேண்​டும். இதில்​ கவனக்​குறை​வாக இருப்​பவர்​கள்​ மீது கடும் நடவடிக்​கை எடுக்​கப்​படும்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT