தமிழகம்

நயினார் நாகேந்திரன் வீட்டில் பழனிசாமிக்கு விருந்து

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வீட்​டில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு நேற்று இரவு விருந்து அளிக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்கொண்​டுள்ள பழனி​சாமி நேற்று முன்​தினம் தூத்​துக்​குடி மாவட்​டம் மற்​றும் திருநெல்​வேலி மாவட்​டம் ராதாபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பின்​னர் நெல்லை சந்​திப்​பில் உள்ள ஓட்​டலில் இரவு தங்​கி​னார்.

சுதந்​திரப் போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் 220-வது நினைவு தினத்​தையொட்​டி, அவரது படத்​துக்கு பழனி​சாமி நேற்று காலை மலர்​கள் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்​னர், நேற்று இரவு நெல்​லை​யில் உள்ள பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வீட்​டில் பழனி​சாமிக்கு 109 வகை​யான உணவு​களு​டன் பிரம்​மாண்ட விருந்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. இதில் பாஜக மற்​றும் அதி​முக முன்​னணி நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர்.

மேலும், தேர்​தல் வியூ​கம் மற்றும் பிரச்​சா​ரப் பயணத்​தில் பங்​கேற்​பது குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இன்று (ஆக. 4) திருநெல்​வேலி, நாங்​குநேரி, பாளை​யங்​கோட்டை தொகு​தி​களி​லும், நாளை முதல் 2 நாட்​களுக்கு (ஆக. 5 மற்​றும் 6) தென்​காசி மாவட்​டத்​தி​லும் பொது​மக்​களிடையே பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். பின்​னர் அவர் விருதுநகர் மாவட்​டத்​துக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்​.

SCROLL FOR NEXT