தமிழகம்

நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம்: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்!

செய்திப்பிரிவு

சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த டி.வினோத்குமாரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதையேற்று அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதி டி.வினோத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிப​தி​யான டி.​வினோத்​கு​மாரை அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வரவேற்​றுப் பேசுகை​யி்ல், ‘‘நீதிபதி வினோத்​கு​மாரின் சொந்த ஊர் தெலங்​கா​னா​வில் நல்​கொண்டா மாவட்​டத்​தில் உள்ள சூரிய பேட்​டை. இந்த ஊரில் லட்​சம் ஆண்​டு​களுக்கு முன்​பாக கற்​கால மனிதர்​கள் வாழ்ந்​த​தாக வரலாற்று ஆவணங்​கள் உள்​ளன. சுத்​த​மான நகராட்சி என பெயர் எடுத்த ஊரும் கூட. அத்​தகைய பெருமை மிகு ஊரில் இருந்து சென்​னைக்கு வந்​துள்ள நீதிபதி வினோத்​கு​மாரை வரவேற்​கிறோம். கடந்த 2019-ம் ஆண்டு தெலங்​கானா உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பதவி​யேற்​றுள்ள அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி​லும் சிறப்​பாக பணி​யாற்ற வழக்​கறிஞர்​கள் முழு ஒத்​துழைப்பை வழங்​கு​வர்” என்​றார்.

இந்​நிகழ்​வில் தமிழ்​நாடு புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.மோக​னகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசி​யேஷன் தலை​வர் எம்​.​பாஸ்​கர், பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ரேவ​தி, லா அசோசி​யேஷன் தலை​வர் செல்​வ​ராஜ் ஆகியோரும் வரவேற்​றுப் பேசினர்.

அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​து, நீதிபதி டி.​வினோத்​கு​மார் பேசும்​போது, ‘‘ பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​று​வதை பெரு​மை​யாக கருதுகிறேன். என்னை வாழ்த்​திய அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​துக்​ கொள்​கிறேன், என்​றார்.

நீதிபதி வினோத்​கு​மார் பதவி​யேற்​றதன் மூலம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யில் உள்ள நீதிப​தி​களின் எண்​ணிக்கை 56 ஆக உயர்ந்​துள்​ளது.காலி​யிடங்​களின்​ எண்​ணிக்​கை 19-ஆக குறைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT