தமிழகம்

சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். பாரா விளை​யாட்​டு​களை ஊக்​குவிக்​கும் வித​மாக நாட்​டிலேயே முதல்​முறையாக, தமிழகத்​தில் சென்னை, திருச்​சி, மதுரை, கடலூர், திருநெல்​வேலி, சேலம் என 6 மாவட்​டங்​களில் ரூ.7.38 கோடி மதிப்​பீட்டில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதில் சென்​னையைத் தவிர, 5 மாவட்​டங்​களில் தலா ரூ.1 கோடி​யில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் உரு​வாக்​கப்​பட்டு வருகின்றன. சென்னை மாவட்​டத்​தில் கீழ்ப்​பாக்​கம், நேரு பூங்கா விளை​யாட்டு வளாகத்​தில் ரூ.2.38 கோடி​யில் பாரா விளை​யாட்டு மைதானம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த மைதானத்​தில் திறந்​தவெளி மேற்​கூரை கொண்ட பாரா-இறகுப்​பந்து ஆடு​களம், உட்​கார்ந்து விளை​யாடும் பாரா-கை​யுந்து பந்து ஆடு​களம், பாரா-டேபிள் டென்​னிஸ் ஆடு​களம், பாரா-​போச்​சியா ஆடு​களம், பாரா-டேக்​வாண்டோ ஆடு​களம், பாரா-ஜூடோ ஆடு​களம், பாரா-கோல்​பால் ஆடு​களம், பாரா-பளுதூக்​குதல் களம் உள்​ளிட்​டவை இடம்​பெறுகின்​றன.

இத்​துடன், நிர்​வாக அலு​வல​கக் கட்​டிடம், உபகரணங்​கள் வைக்​கும் அறை, சக்கர நாற்​காலிகளு​டன் அணுகும் வகையி​லான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இரு​பாலருக்​கு​மான கழிப்​பறை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், கீழ்ப்​பாக்​கம் நேரு பூங்கா விளை​யாட்டு வளாகத்​தில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா-இறகுப்​பந்து மைதானத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

அப்​போது அங்கு நடை​பெற்று வரும் பணி​கள் அனைத்​தை​யும் தரமாக​வும், குறிப்​பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரை​வில் பயன்​பாட்​டுக் கொண்டு வரு​வதற்கு அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். இந்​நிகழ்​வில், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர்​ ஜெ.மேக​நாத ரெட்​டி உள்​ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT