தமிழகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 12.65 லட்சம் மனுக்கள்: மகளிர் உரிமை தொகைக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மூலம் இது​வரை 12.65 லட்​சம் மனுக்​கள் பெறப்​பட்​டுள்​ளன. முகாம்​களில் மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது.

முதல்​வரின் முகவரி, மக்​களு​டன் முதல்​வர் உள்​ளிட்ட திட்​டங்​களைத் தொடர்ந்​து, அரசின் சேவை​களை பொது​மக்​கள் வசிப்​பிடத்​திலேயே சென்று வழங்​கும் வகை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிதம்​பரத்தில் தொடங்கி வைத்​தார்.

அரசுத் துறை சேவைகள்: இத்​திட்​டத்தின்​படி, பொது​மக்​கள் வசிக்​கும் பகு​தி​யில் குறிப்​பிட்ட இடத்​தில் முகாம் நடை​பெறு​வது தொடர்​பாக முன்​னரே தன்​னார்​வலர்​கள் மூலம் அறி​விப்பு செய்​யப்​பட்​டு, அவர்​கள் விண்​ணப்​பத்​துடன் இணைத்து வழங்க வேண்​டிய ஆவணங்​கள் குறித்த விவரங்​களும் வழங்​கப்​படு​கிறது.

‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களில் நகர்ப்​புறப் பகு​தி​களில் 13 அரசுத் துறை​களின் 43 சேவை​களும், ஊரகப் பகு​தி​களில் 15 அரசுத் துறை​களின் 46 சேவை​களும் வழங்​கப்​படு​கின்றன.

45 நாட்களில் தீர்வு: இம்​மு​காம்​களில் பெறப்​படும் விண்​ணப்​பங்​களின் மீது, அதி​கபட்​ச​மாக 45 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஒப்புகைச் சீட்டு நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல், வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மை, சுகா​தா​ரம் உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​பு, மாற்​றுத் திற​னாளி​கள் நலன் உள்​ளிட்ட 13 அரசுத் துறை​கள் மூலம் மக்​களிட​மிருந்து மனுக்​கள் பெற்று உரிய பதிவு​களை மேற்​கொண்டு அதற்கான ஒப்பு​கைச்சீட்​டும் வழங்​கப்​படு​கிறது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்​தொகை பெறதகு​தி​யுள்ள விடு​பட்ட மகளிர் இந்த முகாமில் விண்​ணப்​பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கி வரு​கின்​றனர். அந்த வகை​யில், இது​வரை முகாம்​கள் மூலம் 12.65 லட்​சம் மனுக்​கள் பெறப்​
பட்​டுள்​ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்​சம் மனுக்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT