மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம். 
தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நிரம்​பி​யுள்ள நிலை​யில், காவிரியில் விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து திறக்​கப்பட்டுவருகிறது.

கர்​நாடக​ாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. தற்​போது அணைக்கு வரும் நீர் முழு​வதும் காவிரி​யில் வெளி​யேற்​றப்​படு​கிறது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை 1 லட்​சத்து 500 கனஅடி​யாக​வும், இரவு 1,10,500 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை​யும் அதே அளவு நீடித்​தது. அணையி​லிருந்து விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக விநாடிக்கு 18,000 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 92,000 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்​கப்​படு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர்​இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அணைக்கு நீர்​வரத்து மேலும் அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தால், வெள்ள கட்​டுப்​பாட்டு மையத்​தில் நீரின் அளவை அதி​காரி​கள் கண்​காணித்தும், தேவைக்​கேற்ப நீரை வெளி​யேற்​றி​யும் வரு​கின்றனர். மேலும், வெள்ளம் தொடர்பாக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள் ளது. வரு​வாய், தீயணைப்பு மற்​றும் நீர்​வளத் துறை​யினர் கரையோரங்​களில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

ஒகேனக்கல் நிலவரம்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 1 லட்​சத்து 5,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மாலை​யில் 1.25 லட்​சம் கனஅடி​யாக அதி​கரித்​தது. நேற்று மாலை அளவீட்​டின்​போதும் விநாடிக்கு 1.25 லட்​சம் கனஅடி​யாகவே நீர்​வரத்து தொடர்ந்​தது. நீர்​வரத்து உயர்வு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆறு மற்​றும் அருவி​களில் குளிக்​க​வும், பரிசல் இயக்​க​வும் விதிக்​கப்​பட்ட தடை நீடிக்​கிறது. ஒகேனக்​கல்​லில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், தரு​மபுரி மாவட்​டத்​தில் கா​விரி கரையோர பகு​தி​களை வரு​வாய், வனம் மற்​றும் காவல்​ துறை​யினர்​ தொடர்ந்​து கண்​காணித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT