தமிழகம்

பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​றார் போல மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் நியமனம் செய்​யப்பட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு அரசு மருத்​து​வர்​கள் பல ஆண்​டு​களாகப் போராடி வருகின்றனர்.

இக்​கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி, கடந்த ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்​டம் மேட்​டூரிலிருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி பாத​யாத்​திரையை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வரும், அரசு மருத்​து​வரு​மான எஸ்​.பெரு​மாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் தொடங்​கினர். சென்னை தேனாம்​பேட்டை அருகே வந்​த​போது, அவர்களை போலீ​ஸார் கைது செய்து மாலை​யில் விடு​வித்​தனர்.

இந்​நிலை​யில், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்​ளை​யிடம் விளக்கம் கேட்டு சென்னை மருத்​து​வக் கல்​லூரி நிர்​வாகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​கள் கூறியதாவது: திமுக ஆட்சி அமைந்​ததும் அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்றப்​படும் என 2019-ம் ஆண்டு போராட்​டத்​தின் போது மு.க.ஸ்​டா​லின் நேரில் வந்து உறு​தி​யளித்​தார். ஆனால், ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​கள் கடந்த பிறகும் கோரிக்​கையை நிறைவேற்​ற​வில்​லை.

பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தி​யும் அரசு செவி​சாய்க்​காத​தால் வேறு​வழி​யின்றி காந்​திய வழி​யில் பாத​யாத்​திரை மேற்​கொண்ட மருத்​து​வர் பெரு​மாள் பிள்​ளைக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யிருப்​பது மிகுந்த அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது இது கண்டிக்கத்தக்கது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT