தமிழகம்

சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: விழுப்​புரம் அருகே மகப்​பேறு சிகிச்​சை​யின்​போது கர்ப்​பிணியை மனி​தாபி​மானமற்ற முறை​யில் நடத்​தி​ய​தால் சிசு உயி​ரிழந்த புகார் தொடர்​பான விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசை மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

விழுப்​புரம் மாவட்​டம் புதுப்​பாக்​கத்​தைச் சேர்ந்த கே.தேவ​மணி என்​பவர் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்​பிணி​யான எனது மகளை முருக்​கேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் அனுமதித்தேன்.

அங்கு ரத்​தப்​போக்கு அதி​க​மான நிலை​யில், அவரை பெரிய மருத்​து​வ​மனைக்கு மாற்ற பரிந்​துரை செய்​தனர். இதற்​காக ஆம்​புலன்​ஸில் எனது மகளை ஏற்​றும் நேரத்​தில் மனி​தாபி​மானமில்​லாமல் ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என செவிலியர் நிர்​பந்​தித்​தார்.

இதனால், தாமத​மாகி 8 மாத குழந்தை கரு​விலேயே இறந்​தது. எனது மகளும், மனம் மற்​றும் உடலள​வில் பல்​வேறு பிரச்சினைகளை எதிர்​கொண்​டார். இவ்​வாறு மனித உரிமை மீறலில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை விசா​ரித்த உறுப்​பினர் வி.கண்​ண​தாசன் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது: வழக்கு தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விடப்​பட்டு அறிக்கை பெறப்​பட்​டது.

எனினும், அறிக்​கை​யில் திருப்​தி​யில்​லாத​தால் அனைத்து தரப்​பினரும் விசா​ரிக்​கப்​பட்​டனர். அப்​போது, ரத்த கறையை சுத்​தம் செய்ய சொன்​னது முத்​துலட்​சுமி என்​னும் பணி​யாளர் என்​பது தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக, முத்​துலட்​சுமி பணிநீக்​கம் செய்யப்பட்​டாலும், குழந்​தையை இழந்​த​தால் ஏற்​பட்ட மனஉளைச்​சலுக்​காக தமிழக அரசு ரூ.5 லட்​சத்தை 4 வாரத்​துக்​குள் மனுதாரருக்கு வழங்க வேண்​டும்.

கிராம அளவில் உள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் 24 மணி நேரம் பணி​யில் இருக்​கும் வகையில் அதி​கள​வில் மருத்​து​வர், செவிலியர், மருத்​து​வப் பணி​யாளர்​களை தமிழக அரசு நியமிக்க வேண்​டும். கர்ப்​பிணி​களை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​வ​தில் சிறப்பு கவனம் செலுத்​தும் வகை​யில் அதி​களவு ஆம்​புலன்ஸ் சேவையை அரசு விரிவுபடுத்த வேண்​டும்.

விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு தமிழக அரசு அறி​வுறுத்த வேண்டும். ஏழைகள், பெண்​களுக்கு உரிய நேரத்​தில் சிகிச்சை கிடைக்​கும் வகை​யில் பொதுசு​கா​தார இயக்​குநர் உள்​ளிட்ட அதிகாரி​கள் தொடர்ச்​சி​யாக ஆய்வு செய்​து, போ​திய மருத்​து​வர்​கள் பணி​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்தர​வில்​ பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT