தமிழகம்

கடந்த 4 ஆண்டுகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி சாதனை: பொதுப்பணி துறை குறித்து தமிழக அரசு பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் பல்​வேறு புதிய கட்​டமைப்​பு​களை உரு​வாக்கி பொதுப்​பணித் துறை சாதனை புரிந்​துள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொதுப்​பணித் துறை, தமிழகத்​தின் வளம பெருக்​கும் கட்​டமைப்​பு​களை, வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலைச் சின்​னங்​களை உரு​வாக்​கும் பெரு​மைக் குரியதுறை​யாகும். துறை சார்பில் வள்​ளுவர் கோட்​டம், ரூ.80 கோடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், ரூ.240.53 கோடி​யில் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை உட்பட 4 ஆண்​டு​களில் பல புதிய கட்​டமைப்​பு​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் படைத்​துள்​ளார். 2021-ல் ஆட்​சிப் பொறுப்​பேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஓராண்​டில் சென்னை கிண்​டி​யில் ரூ.240.53 கோடி​யில் கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை, ரூ.210.80 கோடி​யில் 560 படுக்கை வசதி​யுடன் கொளத்​தூரில் பெரி​யார் மருத்​து​வ​மனை, ரூ.187.79 கோடி​யில் மதுரை ராஜாஜி மருத்​து​வ​மனை கட்​டிடம் ரூ.4,179 கோடி​யில் அரியலூர், திண்​டுக்​கல், கிருஷ்ணகிரி, கள்​ளக்​குறிச்​சி, நாகை, நாமக்​கல், உதகை, ராம​நாத​புரம், திருப்​பூர், விருதுநகர், திரு​வள்​ளூர் ஆகிய 11 மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்​குத் தேவை​யான கட்​டிடங்​கள், காஞ்​சிபுரம் காரப்​பேட்​டை​யில் ரூ.218 கோடி​யில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்​று​நோய் மருத்​து​வ​மனை கட்​டிடம் ஆகியவை கட்​டப்​பட்​டுள்​ளன. அதே​போல் ரூ.413.16 கோடி​யில் திருப்​பத்​தூர், ராணிப்​பேட்​டை,மயி​லாடுதுறை, விருதுநகர்மாவட்ட ஆட்​சி​யர் அலுவலக கட்​டிடங்​கள் முதல்​வர் ஸ்டா​லி​னால் திறக்​கப்​பட்​டுள்​ளன.

கீழடி அருங்​காட்​சி​யகம்: கீழடி அகழாய்​வில் கண்​டெடுக்​கப்​பட்ட பழங்​காலப் பொருட்​களைக் காட்​சிப்​படுத்த தமிழ்ப் பண்​பாட்​டின் தொன்​மை​யைப் பறை​சாற்​றும் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதி​களு​டன் கூடிய புதிய அகழ்​வைப்பக அருங்​காட்​சி​யகக் கட்​டிடம் ரூ.18.42 கோடி​யில் முதல்​வ​ரால் திறக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் மதுரை​யில் ரூ.218.84 கோடி​யில் கலைஞர் நூற்​றாண்டு நூல​கம், அலங்​காநல்​லூர் அருகே கீழக்​கரை​யில் ரூ.62.77 கோடி​யில் 5 தளங்​களு​டன் பிரம்​மாண்​ட​மாக உலகின் முதல் ஏறு​தழு​வுதல் அரங்​கம் கட்டி திறக்​கப்​பட்​டுள்​ளது.

வெள்ளி விழா நினை​வாக திரு​வள்​ளுவர் சிலை​யை​யும் விவே​கானந்​தர் பாறையை​யும் இணைக்​கும் கடல் நடு​வில் நாட்​டிலேயே முதலா​வ​தாக ரூ.37 கோடி செல​வில் மிகப் பிர​மாண்​ட​மான கண்​ணாடி இழைப் பாலம் கட்டி திறக்​கப்​பட்​டுள்​ளது. இவை மட்​டுமின்றி டெல்லி சாணக்​கியபுரி​யில் ரூ.257 கோடி​யில் வைகை தமிழ்​நாடு இல்​லக் கட்​டிடங்​கள், கோவை​யில் ரூ.300 கோடி​யில் தந்தை பெரி​யார் நூல​கம், அறி​வியல் மையம், திருச்​சி​யில் ரூ.290 கோடி​யில் கலைஞர் நூல​கம் மற்​றும் அறி​வு​சார் மையம், முட்​டுக்​காட்​டில் ரூ. 525 கோடி​யில் கலைஞர் பன்​னாட்டு மா​நாட்டு மையம் உள்​ளிட்ட பொது​மக்​கள் பயன்​பெறும் பல்​வேறு உயர் தொழில்​நுட்ப கட்​டமைப்​பு​கள்​ கட்​டப்​படு​கின்​றன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT