தமிழகம்

அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டிஜிபி அலுவலகம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாமக தலை​வர் அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட​வில்​லை. சுற்​றறிக்கை தவறாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது என்று டிஜிபி அலு​வல​கம் விளக்​கம் அளித்​துள்​ளது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்​பு​காரில் மகளிர் மாநாடு நடத்​து​வதற்​கான பணி​களில் தீவிரம் காட்டி வரும் நிலை​யில், கட்சி தலை​வர் அன்​புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ நடத்​தப்​போவ​தாக அறி​வித்​து, செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்​போரூரில் நேற்று முன்​தினம் இந்த நடைபயணத்தை தொடங்​கி​னார். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த ராம​தாஸ், சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினையை சுட்​டிக்​காட்டி அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்க வேண்​டும் என்று டிஜிபிக்கு கடிதம் அனுப்​பி​னார்.

இதை தொடர்ந்​து, அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு டிஜிபி சங்​கர் ஜிவால் தடை விதித்​துள்​ள​தாக நேற்று முன்​தினம் தகவல் வெளி​யானது. இதுதொடர்​பான சுற்​றறிக்​கை​யும் வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், இதை மறுத்​துள்ள டிஜிபி அலு​வல​கம், ‘அன்​புமணி நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட​வில்​லை. சுற்​றறிக்கை தவறு​தலாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது’ என நேற்று விளக்​கம் அளித்​துள்​ளது. இதுகுறித்து டிஜிபி அலு​வலக அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘‘அன்​புமணி​யின் நடைபயணத்​தால், சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படக்​கூடும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் சார்​பில் புகார் கடிதம் அளிக்​கப்​பட்​டிருந்​தது. அதில் கூறப்​பட்ட சாராம்​சத்தை சுட்​டிக்​காட்​டி, அந்​தந்த மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர்​கள் (எஸ்​.பி.) சூழ்​நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்​க​வும், சட்​டம் - ஒழுங்கு பாதிக்​காத வகை​யில் உரிய பாது​காப்பு ஏற்​பாடு​களை மேற்​கொள்​ளு​மாறும் சுற்​றறிக்கை மூலம் அறி​வுறுத்​தப்​பட்​டது.

ஆனால், இந்த சுற்​றறிக்​கையை தவறாக புரிந்​து​கொண்​டு, நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவலை பரப்​பி​யுள்​ளனர். அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு எந்த தடை​யும் விதிக்​கப்​பட​வில்​லை’’ என்​றார். இதுகுறித்து பாமக செய்தி தொடர்​பாளர் பாலு கூறிய​தாவது: அன்​புமணி​யின் 100 நாள் பயணத்​துக்கு அந்​தந்த மாவட்ட எஸ்​.பி.க்​கள் அனு​மதி வழங்க பரிந்​துரை செய்​யு​மாறு டிஜிபி அலு​வல​கத்​தில் ஏற்​கெனவே கடிதம் கொடுக்​கப்​பட்​டது. டிஜிபி அலு​வல​கத்​தில் இருந்து அதற்கு பதில் கடித​மும் வந்​தது. ‘அனு​மதி வழங்​கு​வது மாவட்ட எஸ்​.பி.​யின் கட்​டுப்​பாட்​டுக்கு உட்​பட்​டது. எனவே, அந்​தந்த மாவட்ட எஸ்​.பி.க்​களிடம் உரிய அனு​மதி பெற்​றுக் கொள்​ளலாம்’ என்று அதில் கூறப்​பட்​டது.

இது​வரை பாமக தலை​வர் அன்​புமணி​யின் 2 நாள் நிகழ்ச்​சிகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் காவல் துறை​யினர் அனு​மதி வழங்​கு​வார்​கள். எனவே, சட்ட விதி​களுக்கு உட்​பட்​டு, எந்த வித​மான அசம்​பா​வித​மும் இல்​லாமல் பயணம் தொடரும். பயணம்​ வெற்​றி பெறும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT