தமிழகம்

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி குறித்து அனைத்​துக் கட்சி கூட்​டத்தை உடனே கூட்ட மார்க்​சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கு, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026-ம் ஆண்டு நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்தலை​யொட்டி ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்​படுத்​தும் நாளாகக் கொண்டு வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி இந்த ஆண்​டும் வழக்​கம்​போல சுருக்க முறை திருத்​த​மாக நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

ஆனால் தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணியை மேற்​கொள்ள முன்​னேற்​பாடு​களை தொடங்​கு​மாறு இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ள​தாக​வும், அதன் அடிப்​படை​யில் தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி, மாவட்ட தேர்தல் அலு​வலர்​களுக்கு சுற்​றறிக்கை அனுப்​பி​யிருப்​ப​தாக​வும் அறிகிறோம்.

ஏற்​கெனவே பிஹாரில் நடை​பெற்று வரும் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி குறித்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளன.

மேலும் வாக்​காளர்​கள் தங்​களது இந்​திய குடி​யுரிமைக்​கான சான்​றிதழ்​களை சமர்ப்​பித்​தால் மட்​டுமே வாக்​காளர் பட்​டியலில் அவர்​களது பெயர் இணைக்​கப்​படும் என்று கூறி, தங்​களது பெயர்​களை நீக்கி விடு​வார்​களோ என்ற அச்​ச​மும் மக்​கள் மத்​தி​யில் நிலவி வரு​கிறது.

அவசரக​தி​யில் பிஹாரில் நடை​பெற்று வரு​வது​போல சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி நடை​பெற்​றால் பல லட்​சம் வாக்காளர்​கள் பட்​டியலிலிருந்து விடு​பட்டு போய்​விடும் ஆபத்து உள்​ளது.

எனவே இத்​தகைய சூழலில் தேர்​தல் ஆணை​யம், சட்​டத்​தின் அடிப்​படை​யில் அரசி​யல் கட்​சிகளு​டைய கூட்​டத்​தைக் கூட்டி மக்கள் பிர​தி​நி​தி​களின் ஆலோ​சனை​களை பெற்​று, அதன் அடிப்​படை​யில் வாக்​காளர் பட்​டியலை சரி செய்​யும் பணியை நடத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT