தமிழகம்

சென்னை மாநகராட்சியில் தனியார்மயத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 68 இடங்களில் மனித சங்கிலி போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் தூய்​மைப் பணி தனி​யாரிடம் வழங்​கப்​படு​வதை கண்​டித்​து, மாநக​ராட்சி செங்​கொடி சங்​கம் சார்​பில், மாநக​ராட்சி தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் பங்​கேற்ற மனிதச் சங்​கிலி போராட்​டம் 68 இடங்​களில் நடை​பெற்​றது.

சென்னை மாநக​ராட்​சி​யில் 15 மண்​டலங்​கள் உள்​ளன. இதில் தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு.​வி.க.நகர், அண்​ணாநகர் மண்​டலங்​களில் சில வார்​டு​கள், அம்​பத்​தூர் மண்​டலத்​தில் சில வார்​டு​கள் தவிர மற்ற அனைத்து பகு​தி​களி​லும் தூய்​மைப் பணியை தனி​யாரிடம் மாநக​ராட்சி வழங்​கி​யுள்​ளது.

மீத​முள்ள 5 மண்​டலங்​களில் 1000-க்​கும் மேற்​பட்ட தற்​காலிக பணி​யாளர்​கள் 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக தூய்​மைப் பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மேற்​கூறிய 5 மண்​டலப் பகு​தி​களி​லும் தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் வழங்க மாநக​ராட்சி நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இதனால் ஏற்​கெனவே பணி செய்து வரு​வோருக்கு பணி வாய்ப்பு கிடைக்​காது. இத்​தனை ஆண்​டு​களாக மாநக​ராட்சி தூய்​மைப் பணி மேற்​கொண்ட தங்​களுக்கு பணி நிரந்தர வாய்ப்பு பறி​போகும். தனி​யார் பணியை மேற்​கொண்​டால், வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு குழி தோண்டி புதைக்​கப்​படும்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பணிப் பாது​காப்​பு, ஓய்​வூ​தி​யப் பலன்​கள் கிடைக்​காது எனக்​கூறி, மாநக​ராட்சி தூய்​மைப் பணியை தனி​யாரிடம் வழங்​கு​வதை கண்​டித்து மாநக​ராட்சி செங்​கொடி சங்​கம் சார்​பில், 68 இடங்​களில் தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் கருப்பு பேட்ஜ் அணிந்​து, மனிதச் சங்​கிலி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தங்​கள் கோரிக்​கைகளுக்கு அரசு செவி சாய்க்​கா​விட்​டால் போராட்​டத்தை தீவிரப்​படுத்த இருப்​ப​தாக மாநக​ராட்சி செங்​கொடி சங்​கத்​தினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT