தமிழகம்

எவ்வளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிட கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: எவ்​வளவு மது குடிக்​கலாம் என்​பதை மது​பாட்​டிலில் குறிப்​பிடக்​கோரி அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ தாக்​கல் செய்​திருந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான வால்​பாறை ஏ.தரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில். ‘‘மது​வால் பல குடும்​பங்​கள் நடுத்​தெரு​வுக்கு வந்​து​விட்ட நிலை​யில் டாஸ்​மாக் மது​பானக்​கடைகளின் எண்​ணிக்​கையை குறைப்​ப​தாகக்​கூறிய தமிழக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

குடும்ப வன்​முறை சம்​பவங்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​கள், பாலியல் சம்​பவங்​களுக்கு மதுவே முக்​கிய​மான காரணம். எனவே எவ்​வளவு மது குடிக்​கலாம் என்​பது குறித்து விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் அதுகுறித்து மது​பாட்டில்களில் குறிப்​பிட​வும், மது​பான விற்​பனையை வெகு​வாக குறைக்​க​வும் அரசுக்கு உத்​தர​விட வேண்​டும், எனக்​கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம். வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்வில் நேற்று நடந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்​வின் பிர​பாகர் இதுதொடர்​பாக மனு​தா​ரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளிக்​கப்​பட்​டு​விட்​டது.

மது அருந்​துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்​கும் என ஏற்​கெனவே மது​பாட்​டிலில் விழிப்​புணர்வு வாசகம் உள்​ளது. தவிர திரையரங்​கு​களி​லும் விழிப்​புணர்வு வாசகங்​கள் மூல​மாக விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், மதுபாட்​டிலிலேயே மது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்​கும் எனக் குறிப்​பிட்​டுள்ள நிலை​யில், எவ்வளவு மது குடிக்​கலாம் என பாட்​டிலில் குறிப்​பிடும்​படி நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது.

மதுக்​கடைகளின் எண்​ணிக்​கையை குறைப்​பது என்​பது கொள்கை முடிவு என்​ப​தால், அது தொடர்​பாக அரசுதான் முடி​வெடுக்க முடி​யும், எனக்​கூறி வழக்​கை தள்ளுபடி செய்​து உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT