தமிழகம்

விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மாணவிகள், பெண்கள் பாதுகாப்புக்காக தனி சட்டம்: அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: ‘​விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​குச் செல்​லும் மாணவி​கள், பெண்​களின் பாது​காப்​புக்கு தனி சட்​டம் நிறைவேற்​றப்​படும்’ என, உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. விருதுநகர் மாவட்​டத்​தை சேர்ந்த பள்ளி மாண​வி, விளை​யாட்​டுப் போட்டிக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பயிற்சி ஆசிரிய​ரால் பாலியல் தொல்​லைக்கு உள்​ளா​னார்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் விசா​ரணை நீதி​மன்​றம் அவருக்கு சிறை தண்​டனை விதித்​தது. இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் ஆசிரியர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனு தள்ளுபடி​யானது.

நீதிபதி பரிந்துரை: இருப்​பினும் அந்த வழக்​கில், மாணவி​களிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​படு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதற்​காக, தமிழகத்​தில் விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்​கும் பள்ளி மாணவி​கள் பாது​காப்​புக்கு தனி சட்டம் இயற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​ய​வேண்​டும் என அரசுக்கு நீதிபதி பரிந்​துரை செய்​தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. தமிழக அரசு சார்​பில் தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடும்​போது, “உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, விளை​யாட்​டுப் போட்​டிகளில் கலந்​து​கொள்​ளும் மாண​வியர், பெண்​கள் நலன் கருதி பல்​வேறு விதி​முறை​களை தமிழக அரசு வகுத்​துள்​ளது. இந்த விதி​முறை​களை பள்​ளிக் கல்​வித் துறை​யும், விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யும் பின்​பற்ற வேண்​டும் என அர சாணை பிறப்​பித்​துள்​ளது.

தற்​போதுள்ள சட்​டங்​கள் மற்​றும் நீதி​மன்ற தீர்ப்​பு​கள் குறித்து காவல் துறை, கல்​வித் துறை, விளை​யாட்டு மேம்​பாட்​டுத்துறை​யின் செயலர்​கள் விரி​வாக ஆய்வு நடத்​தி, விளை​யாட்​டுப் போட்​டிகளில் கலந்​து​கொள்​ளும் மாணவி​கள், பெண்​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில் சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளது. இந்த சட்​டம் வரும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில் நிறைவேற்​றப்​படும்” என்​றார்.

தமிழக அரசுக்கு பாராட்டு: இதையடுத்து நீதிப​தி, “நாட்​டில் முதன்​முறை​யாக, தமிழகத்​தில் விளை​யாட்​டுப் போட்​டிகளில் கலந்து​கொள்​ளும் மாணவி​கள், பெண்​கள் நலன் கருதி இது​போன்ற சட்​டம் கொண்​டுவர முயற்​சித்த தமிழக அரசை நீதி​மன்​றம் பாராட்​டு​கிறது. சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக, நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை அக்​டோபர் மாதத்​துக்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT