சிறைப்பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் 
தமிழகம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 500 விசைப்படகு​களில் 3 ஆயிரம் மீனவர்​கள் கடந்த 12-ம் தேதி கடலுக்​குச் சென்​றனர். ஈசாக் என்​பவரது விசைப்​படகில் சென்ற ரூதர், சண்​முகம், எடிசன், சக்​திவேல், ஜெகதீஷ், டல்​வின் ராஜ், அன்​பழகன் ஆகிய 7 மீனவர்​கள், நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடல் பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்​த​தாக கூறி, ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை கைது செய்​தனர். அவர்​களது விசைப்​படகை​யும் பறி​முதல் செய்​தனர். 7 பேரும் காங்​கேசன்​துறை கடற்​படை முகா​முக்​கு கொண்டு செல்லப்​பட்​டனர். பின்னர், ஊர்​காவல்​துறை நீதிப​தி உத்​தர​வின்​பேரில் யாழ்ப்​பாணம் சிறை​யில் நேற்று அடைக்கப்பட்டனர்.

அதேபோல, கச்​சத்​தீவு - நெடுந்​தீவு இடையே மரியசீரோன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடிக்க இலங்கை கடற்​படை​யின் ரோந்​துப் படகு வேக​மாக வந்​தது. அந்த படகு மோதி​ய​தில் விசைப்​படகின் பின்​பகுதி சேதமடைந்​தது. படகில் இருந்த 7 மீனவர்களும் வேக​மாக ​படகை இயக்கி ராமேசுவரம் வந்​தனர்​. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT