சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா மற்றும் இயக்குநர் வி.காமகோடி. | படம்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

100-வது சுதந்திர தினத்தில் தன்னிறைவை அடைவோம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: நம்​நாட்​டின் 100-வது சுதந்​திர தினத்​தின் போது பொருளா​தா​ரம், தொழில்​நுட்​பத்​தில் நாம் தன்​னிறைவு பெற்​றிருப்போம். அதற்கு இளைஞர்​களின் பங்​களிப்பு மிக அவசி​ய​மானது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித்​தோவல் தெரி​வித்​தார். சென்னை ஐஐடி​யின் 62-வது பட்​டமளிப்பு விழா நேற்று ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதில் முதன்மை விருந்​தின​ராக தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித்​தோவல், சிறப்பு விருந்​தின​ராக பரத​நாட்​டிய கலைஞர் பத்மா சுப்​பிரமணி​யம் ஆகியோர் கலந்து கொண்​டனர். இந்த விழா​வில் 529 பிஎச்டி உட்பட மொத்​தம் 3,227 மாணவர்​களுக்கு பட்டங்​கள் வழங்​கப்​பட்​டன.

இதுத​விர கல்வி மற்​றும் இதர செயல்​பாடு​களில் சிறந்து விளங்​கியதற்​காக இந்​திய குடியரசு தலை​வர் விருது மற்​றும் பாரத் ரத்னா விஸ்​வேஸ்​வரய்யா நினைவு விருது ஆகியவை மாணவர் பி.எஸ்​.அனிரூத்​துக்​கும், டாக்​டர் சங்​கர் தயாள் சர்மா விருது மாணவர்ஆர்​.அபின​வுக்​கும், ஆளுநர் விருது ராஜகோ​பால் சுப்​ரமணி​யத்​துக்​கும் வழங்​கப்​பட்​டன. இந்த சிறப்பு விருதுகளை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் வழங்கி கவுர​வித்​தார்.

தொடர்ந்து விழா​வில் அஜித் தோவல் பேசி​ய​தாவது: வாய்ப்​பு​களை பயன்​படுத்தி இந்த சமூகத்​துக்​காக மாணவர்​கள் பணி​யாற்ற வேண்​டும். நாட்​டின் 100-வது சுதந்​திர தினம் கொண்​டாட இன்​னும் 22 ஆண்​டு​கள் இருக்​கின்​றன.

அந்த காலக்​கட்​டத்​தில் நீங்​கள் சிறந்த அனுபவ​மும், சிறந்த அறி​வும், பொருளா​தா​ரத்​தில் தன்​னிறைவை​யும் பெற்​றிருப்​பீர்​கள். 100-வது சுதந்​திர தினத்​தின்​போது, நாட்​டின் ஜிடிபி 33 டிரில்​லியன் டால​ராக இருக்​கும். அப்​போது நம்​மை​விட சீனா 22 சதவீதம் குறைவாக இருக்​கும். நாம்​தான் உலகின் மிகப்​பெரிய ராணுவ படையை​யும் வைத்​திருப்​போம்.

தற்​போது செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​ப​மும் வளர்ச்சி கண்டு வரு​கிறது. அதற்​கேற்ப நமது உள்​நாட்டு தொழில்​நுட்ப வளர்ச்​சிகளை மேம்​படுத்தி வரு​கிறோம். அதில் அதி​க​மாக நாம் ஆராய்ச்​சிகள் மேற்​கொள்ள வேண்​டும்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தால் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளதை நினைத்து பெரு​மைப்​படு​கிறோம். பிரம்​மோஸ் மற்​றும் வான்​தடுப்பு பாது​காப்​பு, தகவல் தொடர்பு சாதனங்​கள் ஆகியவை மிக​வும் சிறப்​பாக செயல்​பட்​டன. பாகிஸ்தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​களை மட்​டுமே இலக்​காக கொண்டு நாம் தாக்​குதல் நடத்​தினோம்.

பாகிஸ்​தான் மீதான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைகளை 23 நிமிடங்​களில் முடித்​து​விட்​டோம். பாகிஸ்​தான் உட்பட வெளி​நாட்டு ஊடகங்​கள் இந்​தியா மீது பாகிஸ்​தான் பாதிப்​பு​கள் ஏற்​படுத்​தி​ய​தாக தவறாக செய்​தி​கள் வெளி​யிட்​டன. இந்​தி​யா​வுக்கு பாதிப்பு ஏற்​பட்​டது போன்ற ஒரு படத்தை அவர்​களால் ஆதா​ர​மாக வெளி​யிட முடி​யு​மா. நாம், பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது நடத்திய தாக்​குதலுக்​கான ஆதா​ரங்​களை சேகரித்​துள்​ளோம். பாகிஸ்​தான் விமானபடைத்​தளம் மீது நாம் நடத்​திய தாக்​குதல் சரிசெய்​யப்​பட​வில்​லை. அதுவே சான்​று.

மாணவர்​கள் அனை​வரும் நாட்​டுக்​காக சேவை​யாற்ற வேண்​டும். பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பத்​தில் நாட்டை மேம்படுத்த மாணவர்​களின் பங்​களிப்பு முக்​கி​யம். அடுத்த ஆண்​டு, உலகின் வளர்ந்து வரும் பொருளா​தா​ர வலுமிக்க நாடு​களில் இந்​தியா முக்​கிய இடத்தை பிடிக்​கும். இவ்​வாறு பேசி​னார்.

விழா முடிந்த பின்​னர் சென்னை ஐஐடி​யில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இந்​திய அறி​வு​சார் மையத்​தை​யும் அஜித் தோவல் தொடங்கி வைத்​தார். இந்​தி​யா​வின் கலாச்​சா​ரம் சார்ந்​த மொழி, மானுடம்​, இந்​தி​ய தத்​து​வங்​கள்​ உள்​ளிட்​ட​வற்​றை இந்​த மையம்​ ஆய்​வு செய்​யவுள்​ளது.

SCROLL FOR NEXT