விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வடகரை கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான அறை. (உள்படம்) விபத்தில் உயிரிழந்த கருப்பையா, சவுடம்மாள், கணேசன் 
தமிழகம்

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்

செய்திப்பிரிவு

விருதுநகர்: காரி​யாபட்டி அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்​தில் 3 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 3 பேர் காயமடைந்​தனர். மதுரையைச் சேர்ந்த ராஜசந்​திர சேகரன் என்​பவருக்​குச் சொந்​த​மான பட்​டாசு ஆலை விருதுநகர் மாவட்​டம் காரி​யாபட்டி அரு​கேயுள்ளவடகரை கிராமத்​தில் உள்ளது. இங்கு 30-க்​கும் மேற்​பட்ட அறை​களில் பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. 60-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் இங்கு பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று காலை ஓர் அறை​யில் எதிர்​பா​ராத​வித​மாக வெடி விபத்து ஏற்​பட்​டது. இதில், அந்​தக் கட்​டிடம் முழு​வதும் இடிந்து தரைமட்​ட​மானது. அங்கு பணி​யாற்​றிக் கொண்​டிருந்த தொழிலா​ளர்​கள் கல்​குறிச்சி சவுடம்​மாள் (53), தண்​டியனேந்​தல் கருப்​பையா (35) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், முரு​கன் (45), பேச்​சி​யம்​மாள் (43), கணேசன் (43), மாரி​யம்​மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்​தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்​கள் தீயை அணைத்​து, மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். உயி​ரிழந்த 2 பேரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக விருது நகர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயி​ரிழந்​தார். காயமடைந்த மற்ற 3 பேருக்கும் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது.

விபத்து நேரிட்ட பட்​டாசு ஆலை​யின் உரிமம் உனடி​யாக ரத்து செய்​யப்​பட்​டது. விபத்து தொடர்​பாக காரி​யாபட்டி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, ஆலை மேலா​ளர் கல்​குறிச்சி வீரசேகரன் (53), போர்​மேன் கனி​முரு​கன் (23) ஆகியோரைக் கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது.விபத்​தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு, மாவட்ட ஆட்​சி​யர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

அப்​போது, அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கூறும்​போது, “பட்​டாசு ஆலை விபத்​துக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்​டு, நடவடிக்கை எடுக்​கப்​படும். உயிரிழந்​தோர் குடும்​பத்​தினருக்​கும், காயமடைந்​தவர்​களுக்​கும் உரிய நிவாரணம் வழங்​கப்படும்” என்​றார்.

ரூ.4 லட்​சம் நிவாரணம்

இதற்கிடையே, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்​தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்​சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம்​ வழங்​க உத்​தர​விட்​டுள்​ளேன்​’ என்​று தெரிவித்துள்ளார்.

தொடர் கண்காணிப்பு தேவை

இந்நிலையில், பட்​டாசு ஆலைகளில் விபத்​தைத் தடுக்​கும் வகை​யில், தொடர் கண்​காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்​டும் என தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT