தெய்​வச்​செயல் 
தமிழகம்

ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்க வந்த திமுக பிரமுகர் தெய்வச்செயல் மனைவி போலீஸாருடன் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக பிரமுகரான தெய்வச்​செயல் மீது ஆளுநரிடம் புகார் அளிக்க வந்த அவரது மனைவி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்​தவர் தெய்வா என்ற தெய்​வச்​செயல்​(40). அரக்​கோணம் மத்திய ஒன்​றிய திமுக இளைஞரணி துணை அமைப்​பாளராக இருந்தார்.

இவர், அரக்​கோணம் அடுத்த பரித்​திபுத்​தூரைச் சேர்ந்​த கல்லூரி மாணவி ப்ரீத்​தி(21) என்பவரை கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இரு​வரும் அரக்​கோணத்​தில் வசித்து வந்​துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அரக்​கோணம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ப்ரீத்​தி, கணவர் மீது புகார் அளித்​தார். அதில், தெய்வா ஏற்​கெனவே திரு​மண​மானவர் என்​றும், பல பெண்​களு​டன் அவருக்​குத் தொடர்பு உள்​ள​தாக​வும், தன்னை அடித்து துன்​புறுத்​தி, சில திமுக நிர்​வாகி​களின் விருப்​பத்​துக்கு இணங்​கு​மாறு வற்​புறுத்​து​வ​தாகவும் புகாரில் தெரி​வித்​திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்​குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்​கிடை​யில், தனது புகார் மீது போலீ​ஸார் முறை​யான விசா​ரணை நடத்​த​வில்லை என்று, ப்ரீத்​தி​ குற்றம்சாட்டினார். இதுஒருபுறம் இருக்க தெய்​வாவை கட்​சிப் பொறுப்​பில் இருந்து நீக்​கி திமுக அறிவித்தது. இந்நிலை​யில், ப்ரீ​த்திக்கு ஆதர​வாக​வும், திமுக அரசைக் கண்​டித்​தும் அரக்​கோணம் பழைய பேருந்து நிலை​யம் அருகே நேற்று முன்தினம் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதுஒருபுறம் இருக்க அரக்​கோணம் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணை​யம் தாமாக முன்வந்து விசா​ரணைக்கு எடுத்து, இந்த விவகாரத்தில் உடனடி​யாக பாரபட்​சமற்ற மற்​றும் வெளிப்​படை​யான விசா​ரணை நடத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு கடிதம் எழு​தியது.

இந்நிலையில், கணவரால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவி ப்ரீத்தி நேற்று, தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளிக்க கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார். வந்தவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் ஆளுநர் மாளிகை ஊழியர்கள், 'ஆளுநர் தற்போது இல்லை. எனவே, உங்களது புகார் மனுவை ஆன்லைன் வாயிலாக ஆளுநருக்கு அனுப்பி வையுங்கள்' என கூறினர். இதற்கிடையில், அங்கு வந்த போலீஸார் அவரை உடனடியாக அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால், போலீஸாருடன் ப்ரீத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT