தமிழகம்

ஆண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை..? - விருத்தாச்சலத்தில் விதி மீறிய அதிகாரிகள்!

ந.முருகவேல்

திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள இன்னும் பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சரும் உத்தரவாதம் அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஆண்கள் பெயரிலும், அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விதிகளுக்குப் புறம்பாக மகளிர் உரிமைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​துக்​காக விண்​ணப்​பித்​தவர்​களில் சுமார் 1 கோடியே 14 லட்​சம் குடும்​பத் தலைவி​களுக்கு தற்​போது மாதம் ஆயிரம் ரூபாய் வங்​கிக் கணக்​கில் வரவுவைக்​கப்​படு​கிறது. அதேசம​யம் இதற்​காக விண்​ணப்​பித்​தவர்​களில் சுமார் 57 லட்​சம் பேரது மனுக்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நிராகரிக்​கப்​பட்​டன. நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மேல்​முறை​யீடு செய்​ய​லாம் என அரசு அறி​வித்​தது. அப்​படி முறை​யீடு செய்​தவர்​களுக்கு இது​வரை உரிமைத் தொகை கிடைத்​த​பாடில்​லை.

குடும்​பத்​தின் ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்கு மிகாமல் இருக்​கவேண்​டும், சொந்​த​மாக 10 ஏக்​கருக்கு மேல் வறண்ட நிலம் அல்​லது 5 ஏக்​கருக்கு மேல் ஈர நிலம் இருக்​கக் கூடாது, மின்​சார பயன்​பாடு ஆண்​டுக்கு 3,600 யூனிட்​டுக்​குள் இருக்​கவேண்​டும், 4 சக்கர வாக​னங்​கள் வைத்​திருக்​கக் கூடாது, குடும்​பத்​தில் உள்ள யாரும் அரசின் ஓய்​வூ​தி​யங்​களை பெறு​பவ​ராக இருக்​கக் கூடாது, ஊராட்சி கவுன்​சிலர் உள்​ளிட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள் யாரும் இதில் பயனடைய முடி​யாது என மகளிர் உரிமைத் திட்​டத்​துக்​காக ஏகப்​பட்ட விதி​களை வைத்​திருக்​கிறது அரசு.

இந்​தக் காரணங்​களுக்​காகத்​தான் 57 லட்​சம் மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. ஆனால், கடலூர் மாவட்​டம் விருத்​தாசலம் வட்​டத்​திற்​குட்​பட்ட பழைய நெய்​வேலி ஊராட்​சி​யில், ஊராட்சி கவுன்​சிலர், 4 சக்கர வாக​னம் வைத்​திருப்​போர், மத்​திய அரசின் பொதுத்​துறை நிறு​வனத்​தில் பணி​புரி​யும் ஊழியர் உள்ளிட்டோருக்கும் உரிமைத் தொகை செல்கிறது. மூன்று பேர் அரசு ஊழியர்​களாக இருக்​கும் குடும்​பத்​துக்​கும் உரிமைத் தொகை, கணவ​ருக்கு அரசு வேலை; கவுன்​சிலர் மனை​விக்கு உரிமைத் தொகை எனவும் தாராள​மாக டிக் அடித்​திருக்​கி​றார்​கள். இதன் உச்​ச​மாக, ஒருநபர் குடும்ப அட்டை வைத்​திருக்​கும் ஆண் ஒரு​வ​ருக்​கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க சிபாரிசு செய்து மகத்​தான சாதனை செய்​திருக்​கி​றார்​கள் வரு​வாய்த்​துறை​யினர்.

இந்த ஊராட்​சி​யில் மட்​டும் 642 பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுகி​றார்​கள். இதில் 70 பெயர்​கள் ஆண்​கள் பெய​ராக உள்​ளது. இந்​தப் பட்​டியலைக் கையில் வைத்​துக் கொண்டு நம்​மிடம் பேசிய கம்​மாபுரம் ஒன்​றிய சிபிஎம் செய​லா​ளர் கலைச்​செல்​வன், தகு​தி​யான​வர்​களை எல்​லாம் நிராகரித்​து​விட்​டு, வசதி​யான​வர்​களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வாரிக் கொடுக்​கும் நோக்​கில் வரு​வாய் துறை​யினர் செயல்​பட்​டிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது.

அரசு இந்த விஷ​யத்​தில் உரிய விசா​ரணை நடத்தி தவறு செய்த அதி​காரி​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். முறை​கே​டாக இது​வரை வழங்​கப்​பட்ட தொகை​யை​யும் சம்​பந்​தப்​பட்ட நபர்​களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இல்​லா​விட்​டால் இந்த முறை​கேட்​டைக் கண்​டித்து போராட்​டத்​தில் குதிப்​போம்” என்​றார்.

பட்​டி​யலில் ஆண்​கள் பெயர் இருப்​பது குறித்​தும் தகு​தி​ய​வற்​றவர்​களுக்​கும் மகளிர் உரிமைத் தொகை வழங்​கப்​பட்டு வரு​வது குறித்​தும் விருத்​தாசலம் கோட்​டாட்​சி​யர் அலு​வலக துணை வட்​டாட்​சி​யர் சுமித்​ரா​விடம் (இத்​திட்​டத்​திற்​கான துணை வட்​டாட்​சி​யர்) கேட்​டதற்​கு, “அந்த ஊராட்​சிக்​கான பட்​டியலில் உள்​ளவர்​கள் குறித்து விஏஓ மூலம் விசா​ரித்​து​விட்​டுச் சொல்​கிறேன்” என்று சொன்​னார்.

இரண்டு வாரம் கழித்து இது தொடர்​பாக அவரை மீண்​டும் நாம் தொடர்பு கொண்ட போது, “பட்​டியலில் ஆண்​கள் பெயர் இருந்​தா​லும் மகளிர் உரிமைத் தொகை​யானது மனை​வி​யின் வங்​கிக் கணக்​கிற்​குத் தான் செல்​கிறது” என்​றார்.

ஒருநபர் குடும்ப அட்டை வைத்​திருக்​கும் ஆண் ஒரு​வ​ருக்​கும் உரிமைத் தொகை செல்​கிறதே எனக் கேட்​டதற்​கு, “அதுபற்றி விசா​ரித்​துக் கொண்​டிருக்​கி​றோம். அதே​போல், பொதுத்​துறை நிறு​வனம் மற்​றும் பெங்​களூரு ஐடி நிறு​வனத்​தில் பணி​புரி​கிறவர்​களுக்​கும் மகளிர் உரிமைத் தொகை செல்​வது குறித்து சென்​னைக்கு அறிக்கை அளித்​துள்​ளோம். அங்​கிருந்து வரும் உத்​தர​வைப் பொறுத்​துத்​தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்” என்​றார்​.

SCROLL FOR NEXT