தமிழகம்

நசரத்​பேட்​டை - திரு​மழிசை சாலை சந்​திப்​பில் மேம்​பாலம்: சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர் எ.வ.வேலு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நசரத்பேட்டை- திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, "நசர்த்பேட்டை, திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பல் மேம்பாலம் கட்ட அரசு ஆவண செய்யுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது:

பூந்தமல்லி தொகுதி, நசரத்பேட்டை- திருமழிசை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய்ந்து, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக, தண்டலம் பகுதியில் மேம்பாலம் மற்றும் நசரத் பேட்டையில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் உள்ளடக்கியதாகத்தான் முதன் முதலாக திட்டம் தீட்டப்பட்டது.

இதற்கு பின்னர் மதுரவாயில் முதல் ஶ்ரீபெரும்புதூர் வரை சென்னை வெளிவட்ட சாலையில் 8 கி.மீ நீளத்தில் உயர்மட்ட மேம்பாலம் சாலை அமைக்க ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நசரத்பேட்டை- திருமழிசை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT