தமிழகம்

துணை முதல்வர் உதயநிதி தலைமை​யில் மாநில திட்ட குழுவின் ஆய்வு கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மாநில திட்டக் குழு​வின் கூட்​டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை​யில் சென்னை​யில் நேற்று நடந்​தது. மாநில திட்டக் குழு​வின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை​யில், மாநில திட்டக் குழு​வின் ஆய்வு கூட்டம் சேப்​பாக்​கத்​தில் நேற்று நடைபெற்​றது.

மாநில திட்டக் குழு​வால் இதுவரை தயாரிக்​கப்​பட்டு முதல்வர் மு.க.ஸ்​டா​லினுக்கு அளிக்​கப்​பட்ட அரசின் முன்னோடி திட்​டங்களுக்கான மதிப்​பீட்டு ஆய்வு​கள், சிறப்பு ஆய்வுகள் குறித்​தும், தற்போது நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்​தும், மாநில திட்ட குழு​வால் நடைமுறைப்​படுத்​தப்​படும் சிறப்பு திட்​டங்கள் குறித்​தும் துணை முதல்வர் விரிவாக கேட்​டறிந்து ஆய்வு மேற்​கொண்​டார்.

முதல்​வரின் சிறப்பு திட்​டங்​களால், தமிழகத்​தின் குக்​கிராமங்​களில் உள்ள சாமானிய மக்கள் முதல் நகரத்​தில் வாழும் மக்கள் வரை எந்த அளவில் பயன் பெற்றுள்​ளார்​கள், இந்த திட்​டங்கள் அவர்​களின் வாழ்​வில் ஏற்படுத்​தி​யுள்ள முன்னேற்​றங்​கள், மாற்​றங்கள் குறித்து திட்​டக்​குழு மேற்​கொண்ட ஆய்வு​களில் கிடைத்த புள்ளி விவரங்களை துணை முதல்வர் விரிவாக கேட்​டறிந்​தார்.

இக்கூட்​டத்​தில் மாநில திட்டக் குழு​வின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்​சன், முதல்​வரின் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை செயலாளர் த.உதயச்​சந்​திரன், மாநில திட்டக் குழு உறுப்​பினர் செயலர் எஸ்.சுதா, முழு நேர உறுப்​பினர் இராம.சீனுவாசன், கூடுதல் முழு நேர உறுப்​பினர் ம.விஜயபாஸ்​கர் மற்றும் பகுதிநேர உறுப்​பினர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT