கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம். | படம்: எம். முத்துகணேஷ் | 
தமிழகம்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வாகன வளாகம்

பெ.ஜேம்ஸ் குமார்

கிளாம்​பாக்கம் பேருந்து நிலைய வாகன நிறுத்​துமிட பகுதி​ சமூக விரோத செயல்​களில் ஈடுபடு​வோரின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பயணி​களுக்கு பாது​காப்பு இல்லாத சூழ்​நிலை ஏற்பட்​டுள்​ளது.

இதுகுறித்து காவல் துறை​யும், சம்பந்​தப்​பட்ட துறை அதிகாரி​களும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என பொது​மக்​களும், சமூக ஆர்வலர்​களும் கோரிக்கை விடுத்​துள்ளனர். கிளாம்​பாக்கம் பேருந்து நிலைய வளாகத்​தின் வாகன நிறுத்​துமிட பகுதி​யில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகுரக வாகனங்களை நிறுத்த முடி​யும். இந்நிலை​யில் இந்த வாகன நிறுத்​தும் இடத்​தில் சமூக விரோத செயல்கள் நடப்​பதாக பயணிகள் புகார் தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து காவல்​துறை​யினருக்​கும், போக்கு​வரத்​துதுறை அதிகாரி​களுக்​கும் பலமுறை தெரி​வித்​தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை என பொது​மக்கள் தெரிவிக்​கின்​றனர். குறிப்பாக பேருந்து நிலை​ய வாகன நிறுத்​து​மிடத்​தில் மது பிரியர்கள் காரில் அமர்ந்து மது அருந்​துவது பெண்​களுக்கு பாது​காப்​பற்ற சூழலை ஏற்படுத்து​கிறது. பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இதுகுறித்து சமூக செயற்​பாட்​டாளர் பாண்​டியன் கூறியது: மிக சிறப்பாக பேருந்து நிலையம் இருந்​தா​லும் பயணிகள் முகம் சுளிக்​கும் வகையில் சில சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக சீட்டு விளை​யாடு​வது, குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்​கிறது.

சில சமயங்​களில் பேருந்​துக்காக காத்​திருக்​கும் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற குற்றச் செயல்​களும் நடக்​கின்றன. மது போதை​யில் பெண்களை சிலர் கிண்டல் செய்வது நடக்​கிறது. மது அருந்​துதல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறது. இரவு நேரத்​தில் பாலியல் தொழிலும் நடை

பெறு​வதாக கூறப்​படு​கிறது. பயணிகள் முகம் சுளிக்​கும் வகையிலான செயல்கள் நடைபெறுகின்றன. ஏதேனும் அசம்​பா​விதம் நடைபெறு​வதற்கு முன்பாக காவல் துறை​யும், சம்பந்​தப்​பட்ட துறை அதிகாரி​களும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். காவல்​துறை​யினர் மற்றும் பராமரிப்பு பணியை மேற்​கொள்​ளும் நிறு​வன​ம் தொடர்ந்து ரோந்து பணி​யில் ஈடு​பட்டு, சமூக ​விரோத செயல்களை தடுக்க வேண்​டும். பயணி​களுக்கு பாது​காப்பான சூழ்​நிலையை உரு​வாக்க வேண்​டும் என கோரிக்கை ​விடுத்​தார்​.

SCROLL FOR NEXT