நூல் வெளியீட்டு நிகழ்வில் பதிப்பாளர் டேவிட் டேவிதார், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, கல்வெட்டு ஆய்வாளர் வெ.வேதாச்சலம், நூலாசிரியர் நிர்மலா லஷ்மண். 
தமிழகம்

​முழுமையான தமிழக வரலாற்றை கூறும் ‘தி தமிழ்ஸ்’ நூல்: மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் வரலாற்றை முழு​மை​யாகக் கூறும் வகையில் நிர்மலா லஷ்மண் எழுதிய ‘தி தமிழ்ஸ்’ நூல் திகழ்​வதாக மேற்​கு​வங்க முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி பாராட்​டி​னார்.

மூத்த பத்திரி​கை​யாள​ரும் ‘தி இந்து’ குழுமத் தலைவருமான நிர்மலா லஷ்மண் எழுதி, அலெஃப் புக் பதிப்​பகம் வெளி​யிட்​டுள்ள ‘தி தமிழ்ஸ்’ (The Tamils) என்ற ஆங்கில நூல் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்​றது. மேற்​கு​வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வெளி​யிட்ட இந்நூலை, மூத்த கல்வெட்டு ஆய்​வாளர் வெ.வே​தாச்​சலம் பெற்றுக்​கொண்​டார்.

நிகழ்ச்​சி​யில் பேசிய கோபால​கிருஷ்ண காந்தி, “இந்த நூல் மிகக் கச்சிதமாக எழுதப்​பட்​டுள்​ளது. ‘அளவு’ என்கிற சொல்​லின் எல்லா அர்த்​தத்​தி​லும் இந்த நூல் பொருந்​தக்​கூடியது. ஒரே பேனா​வில் காவிரி, தாமிரபரணி, பாலாறு என எல்லா நதிகளும், தமிழின் மொத்த வரலாறும் இந்த நூலில் எழுதப்​பட்​டுள்​ளது. தமிழக வரலாற்றின் குறுக்கு​வெட்டுத் தோற்​றத்தை இந்நூல் பதிவுசெய்​கிறது. ஆக, தமிழகத்​தின் முழு​மையான வரலாற்றை இந்த நூல் வழியாக நிர்மலா லஷ்மண் பதிவுசெய்​துள்ளார்” என்று பாராட்​டி​னார்.

5 ஆண்டுகள் பயணம்: கல்வெட்​டு ஆய்​வாளர் வெ.வேதாச்​சலம் பேசும்​போது, “இந்த நூலின் ஆக்கத்​துக்காக நூலாசிரியர் நிர்​மலா​வுடன் 5 ஆண்டுகள் பயணம் செய்​தேன். தமிழகம் முழு​வதும் உள்ள கல்வெட்டு​களைப் பார்த்​தோம். தமிழக வரலாறு எனப் பெயருக்காக எழுதப்​படா​மல், கள ஆய்வு மற்றும் வலுவான ஆதாரங்​களின் அடிப்​படை​யில் இந்த நூல் உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

மதுரை மாவட்​டத்​தில் உள்ள மிகப் பழமையான மாங்​குளம் கல்வெட்​டைக் கண்டோம். மிகப் பழமையான தமிழ்ப் பிராமி கல்வெட்டான இதை சில தமிழ்க் கல்வெட்​டாய்​வாளர்கள் பார்த்​தது கூட கிடை​யாது. ஆனால், சிரமத்​தையெல்​லாம் பொருட்​படுத்​தாது, நூலாசிரியர் நிர்மலா அந்தக்கல்வெட்​டைக் காண மலை மீது ஏறி வந்து பார்த்தது உண்மை​யில் மறக்க முடி​யாதது. தமிழ்​நாட்​டின் முக்​கியமான கல்வெட்டு​கள், அகழாய்​வுகள் எல்லா​வற்​றை​யும் பார்​வை​யிட்டு ஆழமாகப் புரிந்​து​கொண்​டு​தான் இந்தப் புத்​தகத்தை எழுதி​யுள்​ளார்” என்றார்.

நிகழ்ச்​சி​யில் ஏற்புரை​யாற்றிய நூலாசிரியர் நிர்மலா லஷ்மண், இந்தப் புத்​தகம் எழுது​வதற்கு அவர் மேற்​கொண்ட நீண்ட பயணத்​தைப் பற்றி விவரித்​தார். தன் பயணத்​தில் எடுத்த புகைப்​படங்​களை​யும் பார்​வை​யாளர்​களுக்​குக் காட்​சிப்​படுத்தி அதன் பின்னணி​யைப் பகிர்ந்​தார். மேலும், “மக்​களு​டனான உரையாடல், பண்டைக் கால ஓவியங்​கள், இலக்​கி​யம், கல்வெட்டு ஆகிய பல வழிகளில் தமிழகத்​தைப் புரிந்​து​கொண்டு இதில் பதிவுசெய்​துள்ளேன்” என்று அவர் குறிப்​பிட்​டார்.

​முன்னதாக இந்த நூலின் ப​திப்​பாசிரியர் டே​விட் டேவிதார், நூல் குறித்து அறிமுக உரை​யாற்றினார். நிகழ்ச்​சி​யின் தொடக்​கமாக சங்க இலக்​கியப் பாடல் ஒன்று நாட்டிய நாடகமாக நிகழ்​த்​தப்​பட்​டது.

SCROLL FOR NEXT