தமிழகம்

சட்டக் கல்லூரி மாணவருக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ்: உயர் நீதிமன்றம்  உத்தரவு.

கி.மகாராஜன்

மதுரை: மதுரை சட்டக் கல்லூரி மாணவருக்கு தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் தீபக் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் மதுரை சட்டக் கல்லூரியில் கடந்த 1997-ல் தமிழ் வழியில் சட்டம பயின்றேன் .குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்திற்கான தேர்வு எழுத உள்ளேன். எனவே, தமிழ் வழியில் பயின்றதற்கான பிஎஸ்டிஎம் (PSTM) சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் .

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “1978 கல்வித்துறை அரசாணையின்படி, மதுரை அரசு சட்டக் கல்லூரியில் தமிழ்வழியில் பாடம் உள்ளது. எனவே மனுதாரருக்கு வழங்க மதுரை சட்டக் கல்லூரி முதல்வர் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT