தமிழகம்

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: மோகன் ஜி மீது 2 பிரிவில் வழக்கு

செய்திப்பிரிவு

பழநி: பஞ்சாமிர்தம் குறித்து திரைப்படஇயக்குநர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஆனால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மோகன் ஜி மீது, பொதுமக்களிடையே தவறான தகவல்களைப் பரப்புவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT