பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கண்ணகி கோயில் காணிக்கை பணம் பறிமுதல்: தமிழக தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கூடலூர்: ஜீப்பில் கொண்டு வரப்பட்ட கண்ணகி கோயில் காணிக்கை பணம் ரூ.96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்ததால் உள்மாவட்டங்களில் வாகனத் தணிக்கை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பு விலக்கிக் கொள் ளப்பட்டுள்ளது. அதே நேரம் கேரளாவில் ஏப். 26-ல் வாக்குப் பதிவு நடைபெறுவதால், தமிழக எல்லை பகுதியில் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை செயல்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது.

விழா முடிந்து ஜீப்பில் கண்ணகி அறக்கட்டளையினர் லோயர்கேம்ப் பென்னி குவிக் மணி மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தனர். அங்கு தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்புக் குழு தலைவர் க.கார்த்திராஜ் தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந் தனர். ஜீப்பை சோதனை செய்தபோது அவர்களிடம் கண்ணகி கோயில் காணிக்கை பணம் ரூ.96 ஆயிரத்து 885 இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் தேர்தல் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT