தமிழகம்

யாஷிகா ஆனந்த் வழக்கு மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நடைபெற்ற நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை மகிளாநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தனது நண்பர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானது. இதில், அவரது தோழி பவானிசெட்டி உயிரிழந்தார். இந்த வழக்கு,செங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணைக்காக நடிகை யாஷிகா ஆனந்த், மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் விசாரணைக்காக மே 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT