உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, சென்னை ஐசிஎஃப் ரயில் அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கண்காட்சியை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இதில் மாணவர்கள், ரயில் ஆர்வலர்கள் உருவாக்கிய சிறிய ரக ஓடும் ரயில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

ஐ.சி.எஃப் வளாகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி

செய்திப்பிரிவு

சென்னை: உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி, சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் உள்ள சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி கடந்த 18-ம் தேதிதொடங்கியது.

தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் ஏப்.19-ம்தேதி விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20, 21) ஆகிய நாட்களில் கண்காட்சி நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று ஏராளமானவர்கள் சென்னை ரயில் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்து, சிறு ரயில் மாதிரிகளை பார்வையிட்டனர். 3 நாட்களில் சுமார் 2,500 பேர் கண்காட்சியை பார்வையிட்டு ரசித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் ஆவர்.

SCROLL FOR NEXT