சென்னை: ஈவேரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் (வடக்கு) மேம்பாலத்தின் குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் நாளை (ஏப்.13) மற்றும் நாளை மறுநாள் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியை மேற்கொள்ளவுள்ளனர். எனவே அப்பகுதியில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈவேரா சாலையில் ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசப்பிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.
அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈவேரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈவிகே சம்பத் சாலைசந்திப்பு மற்றும் காந்தி இர்வின்பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம்.
எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈவேரா சாலைநோக்கி செல்ல கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.