தமிழகம்

3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 3-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாசெய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல்வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 3-வது நாளாக சென்னைதிருவான்மியூரில் வசிக்கும் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற உதவி செயற் பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு முழு விவரங்கள் வெளியிடப்படும் என வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT