சென்னை: தமிழக காங்கிரஸ் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலேசியா எஸ்.பாண்டியன் பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் மலேசியா எஸ்.பாண்டியன். இவர் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும், கடந்த 2016-21-ல் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக வும் இருந்தார்.
இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். திருப்பத் தூரில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.சி.வீரமணி, ராமநாத புரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.