கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத் துணைத் தலைவர் சேகர் பேசினார். 
தமிழகம்

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேகர், மாநிலச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் அகில இந்திய உறுப்பினர் துரை சாமி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்த சாமி, நகரத் தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, தொகுதிப் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ‘திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் சிறப்பாகச் செய்த எம்பி செல்லகுமாருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின பிரிவு ஒருங் கிணைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ஹரி, மூத்த வழக்கறிஞர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT