தமிழகம்

“கட்சியை வளர்க்க அண்ணாமலை போராடுகிறார்” - சரத்குமார் பாராட்டு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: அண்ணாமலை தமிழகம் முழு வதும் சென்று கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்து வருகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் புதூரில் சரத்குமாரின் குலதெய்வமான காமாட்சி அம்மன் கோயில் உள் ளது. சரத்குமார் குடும்பத்தினரின் சொந்த செலவில் அக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் சரத் குமார், அவரது மனைவி ராதிகா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சரத் குமார் கூறியதாவது: வாக்குப் பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் நினைத் தால் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்தலாம். ஆங்காங்கே சிறு, சிறு சம்ப வங்கள் நடைபெறுவதை சட்டம், ஒழுங்கு பாதிப்பு என்று கூற முடியாது. பெரிய அளவில் மத கலவரங்கள், பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் மட்டுமே சட்டம், ஒழுங்கு கெட்டதாக அர்த்தம். பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறாத வகையில் மக்கள் சுயக்கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

மீனவர்கள் கடலில் எல்லையை தாண்டக் கூடாது. எதிர்பாராத விதமாக தாண்டுவோரை சிறையில் அடைப்பது தேவையற்றது. மீனவர் களை திருப்பி அனுப்புவதுதான் இரு நாட்டு உறவுக்கும் நல்லது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைத்தான் விஜய் சந்திப்பதாக கூறியுள்ளார். அப்போதுதான் அவரை மக்கள் ஏற்றுக் கொள் கிறார்களா? என்பது தெரியவரும். நடிகைகள் குறித்து தவறான செய்திகள் தொடர்ந்து வருவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறான செய்திகளை பரப்புவோரை தண்டிக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்த அளவுகோல் என்னிடம் இல்லை. அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT