சென்னை: இறுதிநாட்களையொட்டி, இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் சனி (பிப்.17), ஞாயிறு(பிப்.18) விடுமுறை நாட்கள் என்பதாலும், திங்கள்கிழமை முகூர்த்த நாள் என்பதாலும் இன்று (பிப்.16) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு இடங்களுக்கு: இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள 9,679 பேர் முன்பதிவுசெய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதைக்கருத்தில்கொண்டு, தமிழக அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணா மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகை,வேளாங்கண்ணி, ஓசூர், பெங்க ளூரு ஆகிய இடங்களுக்கும் இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்புபேருந்துகளும், பெங்களூரு விலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 750 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அலுவலர்கள்: மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்துநிலையங்களிலும் போதிய அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.