மஞ்சூர்: மஞ்சூர் அருகே தூனேரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் கூட்டம், குடியிருப்பின் அருகே உலா வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த குரங்கு குட்டி ஒன்று இறந்துள்ளது. மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், தனது குட்டி இறந்தது கூட தெரியாமல், அரவணைத்தபடி அங்கும், இங்குமாக தாய் குரங்கு தூக்கி செல்கிறது. இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குட்டி குரங்கின் உடலை தூக்கிச் செல்லும் தாய் குரங்கின் பாச போராட்டம், அப்பகுதியில் இருப்பவர்களை சோகமடைய செய்துள்ளது.