தமிழகம்

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 100 படகுகளில் அவர்கள் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 மீனவர்களைப் பிடித்துச் சென்றனர். 4 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் காங்கேசன்துரை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், மீனவர்கள் கைதைக் கண்டித்துள்ள ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் பி.சேசுராஜ், இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்கள் விரைவில் மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT