போகிப் பண்டிகையை ஒட்டி சென்னையில் இன்று (சனிக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பழைய பொருட்களை எரித்ததால் நகரமே புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், சென்னை விமான நிலையம் பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருந்ததால் விமானங்கள் பல திருப்பிவிடப்பட்டன.
இருப்பினும், சிறுவர்கள் வழக்கம்போல் போகிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
படங்கள்: ம.பிரபு