தமிழகம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் முடிவுகளை அறிவிக்க இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கவும், தின்பண்டங்கள் விற்கவும் உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் நிர்வாகம் கடந்த அக்.6-ம் தேதிசில நிபந்தனைகளுடன் டெண்டர் கோரியது.

இந்த நிபந்தனைகளை எதிர்த்து வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரர்கள் டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும், இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகள்அறிவிப்பதை தள்ளிவைக்கலாம்' எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை மனுதாரர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த 7 மாவட்டங்களில் மட்டும் இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என நீதிபதி, டாஸ்மாக்நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.31-க்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT