கோப்புப்படம் 
தமிழகம்

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய முறையீடு - உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இதனை வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எனது மனு மீது இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையத்தின் இந்தச் செயல், இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இந்த மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்‌ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால், முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT