பழநியில் பக்தர்கள், காவலாளிகள் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு. 
தமிழகம்

தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பழநி கோயிலில் பக்தர்கள் - காவலாளிகள் கைகலப்பு

செய்திப்பிரிவு

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பக்தர்கள்- காவலாளிகளுக்கு இடையே தள்ளு முள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் பாத விநாயகர் கோயில் அருகேயுள்ள படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்ல முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளிகள் பக்தர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும் மலைக்கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்கும் நேரம் முடிந்து விட்டதாக கூறினர்.

இதை ஏற்க மறுத்த பக்தர்கள், மலைக்கோயிலுக்கு செல்ல முயன்று காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஆத்திரமடைந்த பக்தர்கள் காவலாளிகளை தள்ளி விட்டனர். இதில் பக்தர்கள், காவலாளிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

4 பேர் சஸ்பெண்ட்: சம்பந்தபட்ட தனியார் நிறுவன காவலாளிகள் செல்வகணபதி, தங்கவே ல், கருப்பையா , ராஜசேகர் ஆகியோரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT