தமிழகம்

ஆளுநரின் செயலராக கிர்லோஷ்குமார் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலராக ஆர்.கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் செயலராக ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் தொடர்ந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழக தலைமைசெயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில்,” சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநராக உள்ள ஆர்.கிர்லோஷ்குமார், ஆளுநரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநர் டி.ஜி.வினய், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT